ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை மாற்றியதாகக் கூறப்படும் ஈரானின் தூதரக அதிகாரிகளை பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வரவழைத்ததாக இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெற்றுள்ளதாகவும், சில வாரங்களில் உக்ரைனில் நடக்கும் போரில் அவற்றைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த வாரம் தெரிவித்தார். இதை ஈரான் மறுத்துள்ளது.