Site icon Tamil News

மலேசியா விமான நிலையத்தில் பதற்றம் – துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவம் இரவு 1.30 மணியளவு முனையம் ஒன்றின் வருகை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

சிலாங்கூர் (Selangor) மாநிலத்தின் காவல்துறை தலைவர் அந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சந்தேக நபர் இருமுறை சுட்டிருக்கிறார். அவற்றில் ஒரு தோட்டா உள்ளூரைச் சேர்ந்த தனிப்பட்ட பாதுகாவலரைத் தாக்கியது.

அதற்கு பிறகு சந்தேக நபர் தப்பினார். பாதிக்கப்பட்டவருக்குக் கடும் காயம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய பிறகு சந்தேக நபர் தம்முடைய மனைவியைச் சுட எண்ணியதாகத் தெரியவந்தது.

சந்தேக நபரின் மனைவி உம்ரா புனித யாத்திரைக்குச் சென்றோரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் காரணம் இன்னும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version