Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகிய தொலைபேசி இலக்கம்!

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகிய தொலைபேசி இலக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படுமாயின் அது தொடர்பில், முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 076-7914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011-2505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அண்மையில் வழிகாட்டல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version