Site icon Tamil News

தொழிநுட்ப கோளாறுக்கு நம்பகமற்ற விமானத் தரவுகளே காரணம் – NATS

பிரித்தானியாவில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு நம்பகமற்ற  விமானத் தரவுகளே காரணம் என்று இங்கிலாந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் கூறியுள்ளார்.

நேஷனல் ஏர் டிராஃபிக் சர்வீசஸ் (NATS) இன் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரோல்ஃப், ஆரம்ப விசாரணையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தோல்வியானது அதன் அமைப்பு புரியாதமையினாலும், விளக்கம் செய்ய முடியாதமையினாலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரச்சனை பற்றிய ஆரம்ப விசாரணைகள், இது நாங்கள் பெற்ற சில விமானத் தரவுகளுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது எனவும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version