Site icon Tamil News

இந்தோனேசியாவில் தீப் பிடித்து எரிந்த டேங்கர் கப்பல் : பலர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவில் டேங்கர் கப்பல் ஒன்று தீப்பிடித்த நிலையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

21 பணியாளர்களுடன் எலிசபெத் என்ற டேங்கர், மேற்கு நுசா தெங்கரா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த போது பாலியின் கரங்காசெம் மாவட்டத்தில் உள்ள கிலி டெபெகாங் என்ற இடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

டேங்கர் கிலி டெபெகாங் அருகே வந்தபோது, ​​பணியாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டது என்று   குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் என்ஜினில் இருந்து தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைள கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version