Site icon Tamil News

T20 WC – தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இருந்தன.

இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

தற்போது மழை இடைவிடாது பெய்து வருவதாலும் அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதாலும் அமெரிக்கா – அயர்லாந்து இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வழி இருந்தது.

தற்போது மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்று பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

ஆகையால் குரூப் Aல் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Exit mobile version