சிட்னி தேவாலயத்தில் திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்து, மதம் சார்ந்த “பயங்கரவாத செயல்” என்று ஆஸ்திரேலிய போலீசார் அறிவித்துள்ளனர்.
அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் ஆராதனையின் போது ஒரு பிஷப், ஒரு பாதிரியார் மற்றும் தேவாலயத்திற்கு சென்றவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
குறைந்தது நான்கு பேர் “உயிர் ஆபத்தில்லாத” காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஒரு தேவாலயத்தின் நேரடி ஒளிபரப்பில் படம்பிடிக்கப்பட்டது மற்றும் புறநகர் பகுதியான வேக்லியில் அமைதியின்மையை விரைவில் தூண்டியது.