Site icon Tamil News

துப்பாக்கிகளுடன் நாட்டின் பல பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் நாட்டின் பல பகுதிகளில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலாவ பொலிஸாரால் கல்கமுவ பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மடுகந்த பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மடுகந்த முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. மற்றைய இரு சந்தேகநபர்களும் ஹொரணை மற்றும் அலபத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version