நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு புதிதாக தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.சூர்யா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
நடிகை ஜோதிகா இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சுமார் 200 கோடி வசூலை அந்த படம் கடந்தது.
இந்நிலையில், சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மையை சூர்யா தரப்பு கூறியுள்ளது.
நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கவில்லை என்றும் அது முற்றிலும் வதந்தி என சூர்யா தரப்பு செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது.
Dassault Falcon 2000 ரக பிரைவேட் ஜெட்டை சூர்யா வாங்கியதாக வரும் தகவலில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை என விளக்கியுள்ளனர்.
இந்திய சினிமா பிரபலங்களில் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், நாகார்ஜுனா, ராம்சரண், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், சல்மான்கான், மகேஷ் பாபு, நயன்தாரா மற்றும் சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்கள் பிரைவேட் ஜெட்டை சொந்தமாக வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன.
சூர்யா சொந்தமாக பிரைவேட் ஜெட் வாங்கினாலும், அதில் எந்தவொரு தவறும் இல்லை. அது அவர் சொந்தமாக உழைத்த பணத்தில் வாங்கும் ஒரு சொத்து தான் எனக் கூறுகின்றனர்.