Site icon Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

சாரதி துஷ்மந்த கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இவர்கள் இருவரும் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியை சந்தித்த தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version