Tamil News

பிரபல நடிகை அகன்ஷா துபேயின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுவயது முதலே நடனம், நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அகன்ஷா துபே, டிக்டாக்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான அகன்ஷா துபேவுக்கு மில்லியன்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர்.தொடர்ந்து மொடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.

சில படங்களில் நடித்து வந்த அகன்ஷா துபே, வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது மரணம் போஜ்புரி திரையுலகில் பரபரப்பை கிளப்பிய நிலையில் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் தனது மகளின் மரணத்திற்கு அவளது காதலன் சமர் சிங் மற்றும் சகோதரர் சஞ்சய் தான் காரணம் என தாய் குற்றம் சாட்டிய நிலையில் அவர்களை கைது செய்தனர்.எனினும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என அவரது தாயாரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

Akanksha Dubey was seen crying inconsolably during Instagram Live, hours  before she died by suicide: Reports - India Today

இந்நிலையில் தற்போது அகன்ஷா துபேவின் உள்ளாடையில் விந்தணுக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து பொலிஸ் அதிகாரி டிசிபி அமித்குமார் கூறுகையில், அகன்ஷாவின் உள்ளாடைகள் உட்பட அவரது ஆடையில் விந்தணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமர் சிங், சஞ்சய் சிங், சந்தீப் சிங் மற்றும் அருண் பாண்டே ஆகியோரது உயிரணுக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்படவிருக்கிறது, அதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்த நடிகை கதறி அழுதமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version