Site icon Tamil News

தென் கொரியாவில் திடீரென ஏற்பட்ட விபரீதம் – காரை விழுங்கிய பாதாளக் குழி

தென் கொரியாவில் உள்ள வீதி ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட பாதாளக் குழிக்குள் கார் விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தென் கொரியாவின் தலைநகர் சோலின் சியோதேமுன் வட்டாரத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது அது பக்கவாட்டில் உருண்டு குழிக்குள் விழுந்துள்ளது.

காயமுற்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 80 வயது மதிக்கத்தக்க நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதாளக் குழியால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதேவேளை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திடீரென்று ஏற்பட்ட பாதாளக் குழிக்குள் இந்தியச் சுற்றுப்பயணி ஒருவர் விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version