Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தின் திடீர் சுற்றிவளைப்பு – சிக்கிய பொருட்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 05 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் பிணைக்கப்பட்ட களஞ்சியசாலைக்கு 63 கணினி சாதனங்கள் அடங்கிய பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் டுபாயில் இருந்து விமான அஞ்சல் பார்சல் சேவையின் ஊடாக அனுப்பப்பட்ட போதே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டுபாயில் வசிக்கும் ‘துபாய் நிபுனா’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த போதைப்பொருள் தொகை அனுப்பப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Exit mobile version