Site icon Tamil News

தரமற்றதரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி: கெஹலியவிற்கு மேலும் விளக்கமறியல்

தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சில சந்தேக நபர்களுடன் கெஹலிய ரம்புக்வெல்லவை 2024 ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் ரூ.50 கோடி நிதி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தின் இறக்குமதி மூலம் 130 மில்லியன் ரூபா வருமானம் ஏற்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version