Site icon Tamil News

அரபிக் கடல் பகுதியில் வலுப்பெற்ற புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ‘பைபர்ஜாய்’ புயலாக மேலும் வலுவடைந்தது.

இதன்காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version