Site icon Tamil News

இலங்கையில் ஜனவரி மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, நாடு விசேட வைத்தியர்கள் உட்பட 1700 இற்கும் அதிகமான வைத்தியர்களை இழந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 5,000 இற்கும் அதிகமான வைத்தியர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வைத்தியர் பற்றாக்குறை காரணமாக சிறிய அளவிலான 20 வைத்தியசாலைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், 400 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version