Site icon Tamil News

இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : பலர் கைது!

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 564 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 8 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் 92 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் சந்தேக நபர்களில் 9 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து    153 கிராம் 665 மில்லி கிராம் ஹெரோயின், 88 கிராம் 225 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 6.5 கிலோ கஞ்சா மற்றும் 180 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version