Site icon Tamil News

இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : 418 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், இன்று (18.02) நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 418 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 8 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்   113 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட  போதைப் பொருட்களில் 133 கிராம் ஹெரோயின், 103 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), கிட்டத்தட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் 447 போதை மாத்திரைகள் அடங்குவதாக கூறப்படுகிறது.

Exit mobile version