Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் வீசும் சூறை காற்று : அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை!

ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலை செய்வோர் வீட்டில் இருந்து பணியாற்றுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் திங்கள் காலை வரை 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NSW இன் கிழக்கு கடற்கரை, சிட்னியின் சில பகுதிகள், இல்லவர்ரா மற்றும் ஹன்டர் ஆகிய பகுதிகளில் 100m/h வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் மழையையும் கொண்டுவரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானிலை நிகழ்வு சிறிய ஆலங்கட்டி மழையை உருவாக்கலாம் மற்றும் லேசான பனிப்பொழிவு சாத்தியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version