Site icon Tamil News

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல்

கல் வீச்சில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி காயமடைந்தார். சனிக்கிழமை இரவு விஜயவாடாவில் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. காயம் இடது கண்ணிமையில் உள்ளது.

விஜயவாடா சிங் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளி மைய வளாகத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் வீசியுள்ளார்.

தொண்டர்கள் ஜெகனை மாலை அணிவித்து வரவேற்கும் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உடனடியாக, பேருந்தின் உள்ளே முதலமைச்சருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஜெகன் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஜெகனின் முகத்தில் இரண்டு தையல் போடப்பட்டுள்ளது. கல் வீச்சுக்கு பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

Exit mobile version