Site icon Tamil News

ஈரானில் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை அந்நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை!

கடந்த வாரம் ஈரானில் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட ஒன்பது பாகிஸ்தானிய தொழிலாளர்களின் உடல்கள் இன்று (01.02) அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பில் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தாக்குதலில் காயமடைந்த மூன்று பாகிஸ்தானியர்கள் ஈரானிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் முல்தான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version