Site icon Tamil News

அயர்லாந்தில் கத்திக்குத்து : 03 குழந்தைகள் உள்பட ஐவர் காயம்!

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் நேற்று (23.11) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 03 குழந்தைகள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நகர மையத்தில் கலவரத்தை தூண்டியதாகவும், இது  பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது உட்பட எந்த நோக்கத்தையும் காவல்துறை இன்னும் நிராகரிக்கவில்லை எனறும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவத்தினால்  பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்  தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த கலகத் தடுப்புப் பொலிஸாருக்கும் குடியேற்ற எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட பின்னர் முற்றிலும் அவசியமின்றி அருகிலுள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று நோயாளிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version