Site icon Tamil News

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விலைமனு கோரும் நடவடிக்கை நிறுத்தம்!

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரச தொழில் நிறுவன மறுசீரமைப்பு பிரிவு, ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.

இந்த ஏல முறைக்குப் பதிலாக மாற்று முறையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version