Tamil News

தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சிறிதரன் எம்.பி !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு (31) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய எஸ்.சிறிதரன் தான் தலைவராகத் தெரிவு செய்யப்படுமிடத்து, தமிழ் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை வளர்க்கவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லவும், கூட்டு செயற்பாட்டை மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழரோடு சிறந்த உறவைப் பேணவும் அயராது உழைப்பேன் என்று உறுதியளித்தார்.

மேலும் மாவட்டங்கள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மாவட்டக் கிளைகளோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பேன் என்றும் கூறினார்.

இறுதியில் உறுப்பினர்களது வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.திருக்கோணமலை மாவட்டக் கிளையானது, தனது உறுப்பினர் தத்தம் மனசாட்சிப்படி தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவித்தது.

Exit mobile version