இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக அவருக்கு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை திருகோணமலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்தனர். இதில் சக போட்டியாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தோற்கடித்து சிறிதரன் வெற்றிபெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, சிறிதரன் எம்.பி, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், கட்சியை ஒருங்கிணைத்து பயணிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.