புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) கல்வி அமைச்சில் தனது பணியை ஆரம்பித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான திருமதி வசந்தா பெரேரா அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் திட்ட முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலைப் டிப்ளோமாவையும், பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
முன்னதாக, திருமதி வசந்தா பெரேரா நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்தார்.
இதற்கிடையில், அவர் இலங்கை தூதரகத்தில் மூத்த இராஜதந்திர அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.