Site icon Tamil News

இலங்கையின் தேசிய செல்வம் இளைஞர்களே : ரணில் தெரிவிப்பு!

இந்த நாட்டின் தேசிய செல்வம் இளைஞர்களே அன்றி நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் காலி வலஹந்துவாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுகாதார விஞ்ஞான பீடத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் எஞ்சியுள்ள பணத்தை கல்வி மற்றும் கல்விக்காக நாட்டுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version