Site icon Tamil News

இலங்கையின் பொருளாதார நிலைமை 2027 இல் மீள் எழுச்சி பெறும் – ரணில்!

2018 இல் இருந்த நாட்டின் பொருளாதார நிலைமை 2027 ஆம் ஆண்டில் மீளமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15.03) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வருடம் 2% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை எட்டினாலும், 2019 ஆம் ஆண்டு நிலையை அடைய சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். இருப்பினும், அந்த இலக்கை அடைவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version