Site icon Tamil News

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று (6) காலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று, மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் இருபது இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இதன்படி, மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாய்லாந்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் இன்று பாதுகாப்பாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை மியான்மரில் உள்ள தொடர்புடைய சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் 34 இலங்கை பிரஜைகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version