Site icon Tamil News

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY 013 விமானத்தில் இருந்து 41 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் இங்கு வந்துள்ளதுடன், அவர்கள் குறித்த இலங்கையர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

பல நாள் மீன்பிடி படகுகளை பயன்படுத்தி கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இந்த குழுவினர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version