Site icon Tamil News

கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

டுபாயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வெளிநாட்டு விமானத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கராச்சி விமான நிலையத்தில் விமானம் திடீரென நேற்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் 57 வயதான பலவினி பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் உடல்நிலை மோசமானதால், மருத்துவ உதவி பெறுவதற்காக, கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் அனுமதியுடன் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் பயணியை பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் விமானத்தில் ஏறிய பரிசோதித்துள்ளனர்.

எனினும் குறித்த பெண் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் இயங்கும் சுகாதார அதிகாரியினால் பெண்ணின் இறப்புச் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.

தேவையான ஏற்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், கராச்சி விமான நிலையத்திலிருந்து அவரது உடலை ஏற்றிய விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version