Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு!

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இன்று (21) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து தங்களுடைய பெறுமதியான வாக்களித்தனர்.

நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Exit mobile version