Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- நாமலின் கூட்டத்தின் மீது கல் வீச்சு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சிறு பிள்ளை கற் தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல் தாக்குதலில் மயூரபுர ரோட்டரி வீதியில் வசிக்கும் சிறு பிள்ளை ஒருவரே காயமடைந்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கூட்டம் நடக்கவிருந்த மைதானத்தின் மீது சுமார் 3 கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version