Site icon Tamil News

சிம்பாப்வேக்கான தேர்தல் பார்வையாளராக இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவு

கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கனகனாதன், 2023 சிம்பாப்வேயின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் பார்வையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

கனநாதன் நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் முன்னாள் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் புகழ்பெற்ற சபையுடன் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினார்.

நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதிகள், குட்லக் ஜொனாதன், மொசாம்பிக்கின் ஜோச்சிம் சிசானோ மற்றும் சாம்பியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி டாக்டர் நெவர்ஸ் மும்பா ஆகியோர் அவரது சகாக்கள்.

உகாண்டாவின் முன்னாள் பிரதமர் Dr. Ruhakana Rugunda மற்றும் கென்யாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமினா மொஹமட் தலைமையிலான காமன்வெல்த் குழுவின் பிரதிநிதிகள், சாம்பியாவின் முன்னாள் நிதி அமைச்சர் சிலேஷே புன்டு கப்வெப்வே மற்றும் தற்போதைய COMESA இன் செயலாளர் நாயகம், ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சர்வதேச கண்காணிப்பாளர்கள்,கண்காணிப்பு செயல்முறைக்கு தங்கள் நிபுணத்துவத்தை பங்களிக்க படைகளில் இணைந்தனர்.

Exit mobile version