Site icon Tamil News

இலங்கை தேர்தல் களம் : தமிழர் பகுதியில் தோட்டாக்களுடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட நபர்!

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபரொருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை தான் எடுத்ததாக அந்த இளைஞர் கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version