இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தற்போது பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்டு வருவதுடன், 1990ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.