Site icon Tamil News

இலங்கை : கோர விபத்தில் சிக்கி மூவர் பலி

திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் துனுகஹ சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேகமாக வந்த முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 30, 38 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Exit mobile version