Site icon Tamil News

இலங்கை : பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூவர் கைது!

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோதிடத்தில் புகழ் பெற்ற 44 வயது மதிக்கத்தக்க கலபாலுவாவே தம்மரதன என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த 4 பேர் தங்களை சிஐடி அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Exit mobile version