Site icon Tamil News

இலங்கை : விபத்துக்குள்ளான தொடருந்தின் இயந்திர இயக்குநர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் விபத்துக்குள்ளான தொடருந்தின் இயந்திர இயக்குநர், விசாரணைகள் நிறைவடையும் வரை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலாபம் நோக்கிப் புறப்படுவதற்காக நேற்று பிற்பகல் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பிரவேசித்த தொடருந்து ஒன்று முதலாவது மேடையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

Exit mobile version