Site icon Tamil News

இலங்கை: ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு!

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன்படி வேதன முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அவர்களின் சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை இது மேற்கொள்ளப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version