ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று (14.08) பிற்பகல் கையொப்பமிட்டுள்ளார்.
கொழும்பு மால் வீதியில் உள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் இது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஜனாதிபதியின் வழக்கறிஞர் ரொனால்ட் சி. பெரேரா பிணைப் பணத்தை டெபாசிட் செய்திருந்தார்.
அவர் ஜூலை 26ஆம் திகதி காலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்து திரு.ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணைப் பணத்தை வைப்பிலிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி முதன்முறையாக ஜூலை 27ஆம் திகதி காலியில் நடைபெற்ற ஜயகமுவ காலி மாவட்ட மக்கள் மாநாட்டில் தெரிவித்தார்.