இலங்கை

இலங்கை : எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்த உத்தரவு!

நாட்டில் போதிய எரிபொருள் இருப்பு இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் உரிய அதிகாரிகளுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் போதிய எரிபொருள் இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

வருடத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு திறமையாக செயற்படுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

800 பேருக்கு இந்திய உதவி மூலம் கிடைத்துள்ள சோலார் பேனல்களை விரைவில் வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, மின்சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வீதி வரைபடத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். .

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மின்சக்தி அமைச்சு விளக்கியுள்ளது.

இதன்படி மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு உதவியில் அமுல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், கிராமத்திற்கு பணம் செல்லும் முறையை விரைவாக ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content