Site icon Tamil News

41 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்கள் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டியில் 50 பொதிகளில் பொதி செய்து கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள்களின் வீதி மதிப்பு ரூ. 41 மில்லியன் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 25 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதிகளுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

Exit mobile version