Site icon Tamil News

இலங்கை : தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை!

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூட்டை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த உர மூட்டை 12000 முதல் 14000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வால், தேயிலை சாகுபடிக்கு விவசாயிகள் உரமிடாத நிலை உள்ளது.

இதனால் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட தேயிலையின் அளவு 216 கிலோவாக குறைந்துள்ளது.

Exit mobile version