Site icon Tamil News

இலங்கை: 12 மில்லியன் பெறுமதியான யானை முத்துகளுடன் ஒருவர் கைது

ஐந்து யானை முத்துக்களை (கஜமுத்து) விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவரை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த யானை முத்துக்களின் மதிப்பு தோராயமாக12 மில்லியன் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version