Site icon Tamil News

இலங்கை: மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version