Site icon Tamil News

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடுகளின் பட்டியிலில் இடம்பிடித்த இலங்கை!

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில்,  உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி ஆலோசகர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

தெற்காசியாவில் அதிகூடிய மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இலங்கை தற்போது இடம்பிடித்துள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மின்சார உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்கும் வகையில் புதிய முறையொன்றை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version