Site icon Tamil News

இலங்கை : பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்குப் பின்னர் மறைந்து கொள்வதற்காகவே இந்த வேன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version