WhatsApp ஊடாக கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்டள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் நிர்வாகியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி ஆங்கிலப் பாடத்திற்குரிய பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த வினாத்தாள் WhatsApp குழுக்களினூடாக பகிரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 61 வயதான குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.