Site icon Tamil News

இலங்கை தேர்தல் – ராஜபக்ஷ குடும்பம் இன்றி ரணிலின் வெற்றிக்காக களமிறங்கும் அரசியல்வாதிகள்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் ராஜபக்ஷர்கள் இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் அரசியல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

ராஜபக்ச இல்லாத கூட்டணியை உருவாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இணைய உள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கூட்டணியின் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக இங்கு மூன்று அரசியல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கப்பட உள்ளது.

அதன்பின், அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version